Saturday, February 9, 2013

மனுஷ்யபுத்திரன் ,பீ ஜே, நாம்...


"தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் விவாதத்தில் பயன்படுத்தும் மொழியையும் வழிமுறையையும் மனசாட்சியுள்ள, அறிவார்ந்த இஸ்லாமிய சமூகத்தின் பார்வைக்கு முன்வைக்கிறேன்-மனுஷ்யபுத்திரன்"


(https://www.facebook.com/notes/manushya-puthiran/கடவுளின்-பெயரால்-பிப்ரவரி-உயிர்மை-தலையங்கம்படியுங்கள்-பகிருங்கள்/10151276454646725)

      மனுஷ்யபுத்திரனின் இந்த பத்தியை கண்ட பின் மனது மிகவும் கவலை அடைந்தது. ஒரு கணம் நானும் ஒருவனோ என்கின்ற வெட்கம் உருத்துகிறது. எப்படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு உயர்ந்ததோ, அது போலவே ஒவ்வொருவருக்கும் அவர் கொண்ட நம்பிக்கைளும் இலட்சியங்களும் உயர்ந்ததும் சிறந்ததும் ஆகும். அதை மதிப்பதும் புரிந்து செயல்படுவதும் அவர் கொண்ட நம்பிக்கைளுக்கு அப்பாற்பட்ட மிக சாதாரணமான பண்பாடு சார்ந்த விடயமாகும். ஒருவர் தன்னை ஒரு மதத்தின் முன்மாதிரியாக காட்டிக் கொள்ளும் போது இந்த சிறு பண்பாடு கூட அற்றவராக இருப்பது அவரை விட அந்த மதத்தை பின்பற்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு இழைக்கும் பெரும் அநியாயம் ஆகும்.










எனவே, விமர்சிக்கின்ற போது மரியாதையுடன் தம் பக்க நியாயங்களை முன்வைத்தல் என்பது ஒரு குறைந்த பட்ச நாகரிகமாகும். இந்த அடிப்படை கூட தெரியாதவர் ஒரு மத குருவாக இருப்பதும் அவரை பின்பற்ற ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பதும் மிகவும்ஆபத்தானது. இது பற்றி முஸ்லிம்கள் எதிர்வினையாற்றுவது அவசியமாகும். நியாயம் என்று வருகின்ற போது அது உங்கள் மதம் சார்ந்த்தாக இருக்க வேண்டியதில்லை , மனிதாபிமானம் சார்ந்த்ததாக இருத்தலெ அடிப்படை ஆகும். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு என்பதை விட மனிதர்களுக்கு நலம் கொண்ட விடயங்களையே சொல்கின்றது. அதன் கொள்கைகள் அனைவருக்கும் பொருந்தும் என்றால் நாம் அன்றாடம் காண்கின்ற அடிப்படை பண்பாட்டு விழுமியங்களை உள் வாங்கியதாக அல்லது அதை விட சிறந்த ஒன்றை முன்வைப்பதாக இருக்க வேண்டும்.  ஆனால் இவர்களின் முன்மாதிரி அப்படியான ஒன்று அறவே இல்லை என்ற உண்மைக்கு முற்றிலும் புறம்பான கருத்தையே எடுத்துச் சொல்கின்றது. இதை நாம் எதிர்த்தல் எம் மீதான அடிப்படை கடமையாகும்.
           
மனுஷ்யபுத்திரனை தொடர்ந்து வாசிப்பவன் என்ற வகையில் அவர் எப்போதும் அநியாயதுக்கு எதிரான தனது கருத்துக்களை பதிவு செய்தவர், அதற்காக உயிர்மையில் அடுத்தவர்களுக்கும் இடம் கொடுத்தவர். இந்தியாவின் இந்துத்துவ தீவிரவாதத்துக்கு எதிரான குரலை பதிவு செய்த ஒருவர். அவர் இப்படி அவமானப் படுத்த பட்டமை மிகவும் அநாகரிகமான செயலாகவே கருதுகிறேன். அவரது கருத்துக்கள் அனைத்தும் சரி என்பது அல்ல , அவர் சொல்வதை கேட்டு நம்மை சுயவிமர்சனம் செய்வதோ அவருடன் உடன்பாடற்ற விடாயங்களுக்கு நியாயமான எதிர்கருத்துக்களை அழகான முறையில் முன்வைப்பதோ அன்றி மிக கீழ்தரமான விதத்தில் கூச்சலிடுவது ஒரு மிகப் பெரும் நாகரிகத்தின் சொந்தக்காரர்களுக்கு எந்த விதத்திலும் பொருந்தாது.

No comments:

Post a Comment